என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மியாமி ஓபன்
நீங்கள் தேடியது "மியாமி ஓபன்"
மியாமி ஓபன் டென்னிஸில் முன்னணி வீராங்கனைகளான நவோமி ஒசாகா, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் தோல்வியடைந்தனர். #MiamiOpen
மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல்தர வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, தைவானின் சு-வெய்-ஐ எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஒசாகா 6-4 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 27-ம் நிலை வீராங்கனையான சு-வெய் 2-வது சுற்றில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட் ‘டை-பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் சு-வெய் 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றினார்.
3-வது செட்டில் ஒசாகா கடுமையாக போராடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-6 என எளிதில் தோல்வியடைந்தார். இதனால் சு-வெய் ஒசாகாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் தரநிலை பெறாத கனடாவின் அண்ட்ரீஸ்குவை எதிர்கொண்டார். முதல் செட்டை அண்ட்ரீஸ்கு 6-4 எனக் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெர்பர் 2-வது செட்டை 6-4 எனக்கைப்பற்றினார். ஆனால், 3-வது செட்டில் 1-6 என சரணடைந்ததால், ஏஞ்சலிக் கெர்பர் தோல்வியடைந்து வெளியேறினார்.
பெர்ட்டன்ஸ், கோன்டாவெயிட், வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
முதல் செட்டை ஒசாகா 6-4 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 27-ம் நிலை வீராங்கனையான சு-வெய் 2-வது சுற்றில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 2-வது செட் ‘டை-பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் சு-வெய் 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றினார்.
3-வது செட்டில் ஒசாகா கடுமையாக போராடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3-6 என எளிதில் தோல்வியடைந்தார். இதனால் சு-வெய் ஒசாகாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் தரநிலை பெறாத கனடாவின் அண்ட்ரீஸ்குவை எதிர்கொண்டார். முதல் செட்டை அண்ட்ரீஸ்கு 6-4 எனக் கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கெர்பர் 2-வது செட்டை 6-4 எனக்கைப்பற்றினார். ஆனால், 3-வது செட்டில் 1-6 என சரணடைந்ததால், ஏஞ்சலிக் கெர்பர் தோல்வியடைந்து வெளியேறினார்.
பெர்ட்டன்ஸ், கோன்டாவெயிட், வோஸ்னியாக்கி ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X